ஆசீர்வதிக்கும் தேவன் நம்மை என்றும்
நடத்திடுவார் - 2
இந்த வருடம் முழுவதும் தம் கிருபையால்
மூடுவார் - 2
நித்தம் நித்தம் நீ வளருவாய்
நித்தம் நித்தம் நீ செழித்திருப்பாய்
நித்தம் நித்தம் நீ உயருவாய்
பூத்துக் கனிகள் தருவாய்-2
1.உன்னைக் கீர்த்தியும் புகழ்ச்சியாய்
இயேசு என்றென்றும் நடத்துவார்-2
உன் பெயரை அவர் என்றென்றும்
பெருமைப் படுத்துவார்-2
2.ஐசுவரியம் கனமும்
அவர் கரத்தில் உள்ளது-2
உன்னை பெலப்படுத்த மேன்மைப் படுத்த
அவர்
கரத்தினால் ஆகுமே-2
3.நன்மையும் கிருபையும் அனுதினம்
தொடர்ந்திடும்-2
உன் பாத்திரம் நிரம்பி வழிந்திட
நீதியின் பாதையில் நடத்திடுவார்-2