பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே..


 Download PPT