பரலோகம் எந்தன் தேசமாம்
பூலோகம் மாயலோகமாம்
அழிந்து போகும் இப்பூமியில்
அழியாத உம் வார்த்தை விதைப்பேன்

இருளான என் வாழ்க்கையில்
ஒளியாக வந்த தெய்வம் நீர்
ஒளியான கிறிஸ்து
உம்மை நான் உலகமெங்கும்
பாடித் துதிப்பேன்

அற்பமான என் வாழ்க்கையில்
அன்பின் தெய்வம் தேடி வந்தீர்
அழிவில்லா உன் வார்த்தையை
அகிலமெங்கும் பாடித்துதிப்பேன்

பாவியான என் வாழ்க்கையில்
பாவம் போக்க வந்த தெய்வம்
பரிதபிக்கும் என் தேசத்தில்
பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன்