என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2

1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை

2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

4.நான்
வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை..