Thaayin Karuvil Uruvagum Lyrics




தாயின் கருவில் உருவான நாள்முதல்

பெயர் சொல்லி அழைத்தவரே

தாயின் கருவில் உருவான நாள்முதல்

தெரிந்து கொண்டவரே


என் எலும்புகள் உருவாகும் முன்னமே

தெரிந்துகொண்டவரே

என் அவையங்கள் உருவாகும் முன்னமே

பெயர் சொல்லி அழைத்தவரே


நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா

நன்றி நன்றி நன்றி நன்றி


பிரம்மிக்கதக்கதாய் உண்டாக்கினீர்

உம் சாயலின் அழகை எனக்குத் தந்தீர்

நாசியில் சுவாசத்தை எனக்குத்தந்து

என்னை சுகத்தோடு வாழ செய்தீர்


தாய் என்னை மறந்தாலும்

தந்தை என்னை மறந்தாலும்

நீர் என்னை மறப்பதில்லை

என்னை உள்ளங்கையில் நீர் வரைந்துள்ளீர்

என்னை ஒருபோதும் மறக்க மாட்டீர்


நீர் என்னை ஆராய்ந்து அறிகின்றவர்

நான் நடந்தாலும் படுத்தாலும் அறிகின்றவர்

உம் ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்

உம் சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்