AZHUKAIN PALLATHAKKIL | அழுகையின் பள்ளத்தாக்கில் Lyrics PPT | Fr. Berchmans


Alugayin Pallathakkil | அழுகையின் பள்ளத்தாக்கில் Lyrics PPT | Fr. Berchmans


அழுகையின் பள்ளத்தாக்கில்
நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன்
நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால்
தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒருநாள் உம் சமூகம் மேலானது
பெலத்தின்மேல் பெலனடைந்து
பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்



DOWNLOAD PPT


Keywords: azhukain pallathakkil lyrics. azhukain pallathakkil ppt. azhukain pallathakkil song lyrics. alukayin palathakil lyrics. alukayin pallathakkil lyrics. berchmans. alugayin pallathakkil lyric ppt. alugayin pallathakkil lyrics. chords. அழுகையின் பள்ளத்தாக்கில் lyrics