Vazhvil Nilai Ariya Neram

வாழ்வின் நிலை அறியா நேரம்
வாழ்க்கை துணையாக வந்த தெய்வம் நீரே

கண்ணீரின் பள்ளத்தாக்கில் கடல்
நடுவில் தொலைந்த எந்தன் வாழ்வை
கறை சேர்த்த எந்தன் அன்பு இயேசுவே

ஆயிரம் பதினாயிரம் பேரில் என்னை
பெயர் சொல்லி அழைத்த அன்புஇயேசுவே
பாவ சேற்றில் விழுந்த என்னை கழுவி
உந்தன்மடியினிலே தவழ செய்த இயேசுவே

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆர்ப்பரிப்பேன்
உயிருள்ள நாள் வரையில் அர்ப்பணிப்பேன்-எந்தன்

பிள்ளையாக வளர்த்து நீரும் என்னை
பிதா என்று அழைக்க செய்த இயேசுவே
கிருபையாலே எந்தன் வாழ்வை மாற்றி
மகிமையாக நடத்தும் அன்பு இயேசுவே

ராஜாக்களாய் ஆசாரியராக என்னை
அபிஷேகம் செய்த அன்பு இயேசுவே
உலகத்தில் உம் நாமம் உயர்த்த
உயிர் தந்த எந்தன் அன்பு இயேசுவே

DOWNLOAD PPT